ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பின் 370ஆவது பிரிவை மத்திய அரசு இன்று ரத்து செய்துள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், “காஷ்மீர் விவகாரத்தில் ஏதோ தவறான நடவடிக்கையை எடுக்கப் போகிறார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் இப்படி ஒரு பேரழிவு நடவடிக்கையைச் செய்வார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை.