தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரெப்போ வட்டி குறைப்புக்கு ப. சிதம்பரம் வரவேற்பு - RBI announcement p chidambaram

'வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்தொகைக்கான ரெப்போ வட்டி 5.15 விழுக்காட்டிலிருந்து 4.4 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவை வரவேற்கிறேன்' என மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

p-chidambaram
p-chidambaram

By

Published : Mar 27, 2020, 3:09 PM IST

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலில் பொருளாதாரம் பாதிக்காத வண்ணம் செயல்பட ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்தொகைக்கான ரெப்போ வட்டி 5.15 விழுக்காட்டிலிருந்து 4.4 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவை வரவேற்பதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் பணப்புழக்கத்தைச் சீராக்கும்விதமாக மூன்று லட்சம் கோடி சந்தையில் ரிசர்வ் வங்கி செலுத்தும் முடிவும் சரியான முடிவு எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மாதக்கடன் தவணைத் தொகையான இஎம்ஐ தொகை தொடர்பான அறிவிப்பு அரை மனதுடன் எடுக்கப்பட்ட விவாதத்திற்குரிய முடிவு என சிதம்பரம் கூறியுள்ளார்.

இவ்விவகாரத்தை ரிசர்வ் வங்கி தெளிவுடன் கையாண்டிருக்க வேண்டும் எனவும், இது தொழில் துறையினரை கவலைக்குள் ஆழ்த்தக்கூடும் என்றும் சிதம்பரம் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே, பொருளாதார அவசரத் தேவையை உணர்ந்து மத்திய அரசு சார்பில் 1.7 லட்சம் கோடி ரூபாய் அவசர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா பாதிப்பால் இந்திய பொருளாதாரம் குறையும் - மூடீஸ் கணிப்பு

ABOUT THE AUTHOR

...view details