தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 21, 2020, 12:40 PM IST

ETV Bharat / bharat

'கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன' - ஐ.சி.எம்.ஆர்.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Over one lakh samples tested for COVID-19 in last 24 hours: ICMR
Over one lakh samples tested for COVID-19 in last 24 hours: ICMR

இந்தியாவில் கரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமாகிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 31 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

நேற்று புதிதாக 5,609 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,359ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 3,435 பேர் உயிரிழந்த நிலையில், 45,300 பேர் இத்தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,03,532 மாதிரிகள் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்துள்ளது. இன்று (மே 21) காலை எட்டு மணிக்கு வெளியான தகவலின்படி நாட்டில் இதுவரை 26,15,920 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

முன்னதாக, கரோனா பரிசோதனையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஐ.சி.எம்.ஆர். புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த வழிமுறைகளின்படி, இனி சேகரிக்கப்படும் புதிய மாதிரிகளை பிசிஆர் முறைப்படி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், பிறகு இரண்டாம் கட்டமாக அந்த மாதிரிகளை RdRp மரபணு உறுதிப்படுத்தல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனைகளின் முடிவுகளில் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றால் மாதிரியை 'ட்ரூ பாசிடிவ்வாக' எடுத்துக்கொள்ளுமாறும், அதனை இன்னொரு முறை பரிசோதிக்க வேண்டும் எனவும் அந்த வழிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விமான பயணிகளுக்கான விதிமுறைகள் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details