தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வந்தே பாரத் திட்டம் மூலம் 40 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்'

வந்தே பாரத் திட்டம் தற்போது எட்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதுவரை சுமார் 40 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

By

Published : Dec 19, 2020, 3:33 PM IST

Vande Bharat Mission
Vande Bharat Mission

கரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்தை கடந்த மார்ச் மாத இறுதியில் மத்திய அரசு முடக்கியது. எனவே வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், மத்திய அரசின் ’வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்படுகின்றனர்.

கடந்த மே 7ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் மூலம் மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், தற்போது ஏழாவது கட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இது தொடர்பாக பேசிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “ஏழாவது கட்ட வந்தே பாரத் திட்டத்தில் சுமார் 40 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

டிசம்பர் மாதத்தில் மட்டும் எட்டாயிரத்து 546 இந்தியர்கள் ஷார்ஜா, லண்டன், நைரோபி, டொரென்டோ, சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர்.

ஏர் இந்தியா, இண்டிகோ, கோ ஏர், ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் இந்தச் சேவையை மேற்கொண்டுள்ளன. தற்போதுள்ள எட்டாம் கட்ட வந்தே பாரத் திட்டம் டிசம்பர் 31ஆம் தேதிவரை தொடரும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:மதத்தால் பிரிக்கப்பட்டு காதல் ஜோடியை ஒன்றிணைத்த நீதிமன்றம் !

ABOUT THE AUTHOR

...view details