தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் - மத்திய அரசு திட்டவட்டம் - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்

மாநிலங்களவைத் துணைத் தலைவரிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரத்தில் எதிர்கட்சிகள் மன்னிப்பு கோர வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Government
Government

By

Published : Sep 22, 2020, 9:00 PM IST

வேளாண் மசோதா விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

முன்னதாக, மசோதா தாக்கலின் போது மாநிலங்களவைத் துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிடம் அத்துமீறி அவமதிப்பான முறையில் நடந்துகொண்டதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இவர்களின் இடை நீக்க முடிவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவை புறக்கணிப்பு முடிவை மேற்கொண்டுள்ளன.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது, மாநிலங்களவை தலைவர் முன் சென்று தாக்குதல் அமளியில் ஈடுபட்டவர்கள் அவைக் காவலர்கள் இல்லையென்றால் தாக்குதல் நடத்தும் அளவிற்கு சென்றுள்ளனர். இந்த விவகாரத்தில் அரசியல் செய்யும் காங்கிரசுக்கு ஜனநாயகம் பற்றி பேச தகுதியில்லை.

அமளியில் ஈடுபட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் துணை அதிபரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:"விவசாயிகளுக்கு தேவை ஒற்றை சந்தையல்ல.. பல்லாயிரம் சந்தை" - ப.சிதம்பரம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details