கரோனாவால் நாடு முழுவதும் தொடர்ந்து நான்காவது முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் கடந்த மே 1 ஆம் தேதியிலிருந்து இதுவரை 22 லட்சம் பேர் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உத்தரப் பிரதேசத்திற்கு 912 ரயில்களும், பிகார் மாநிலத்திற்கு 398 ரயில்களும், குஜராத்திற்கு 583 ரயில்களும், மகாராஷ்டிராவிற்கு 320 ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. மேலும் ஷ்ராமிக் சிறப்பு ரயில் ஒரு பயணத்தில் மட்டும் சுமார் ஆயிரத்து 700 குடிபெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி செல்கிறது.