தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 25, 2020, 8:03 PM IST

ETV Bharat / bharat

புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - எல்லையில் போலீஸ் தீவிர சோதனை

புதுச்சேரி: கரோனா அச்சம் காரணமாக அமலில் இருந்த தேசிய ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

liquor
liquor

கரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மேலும் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், புதுச்சேரியில் 62 நாட்களுக்குப் பிறகு மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், புதுச்சேரி - தமிழ்நாடு எல்லையில் உள்ள கடலூர் மாவட்ட மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், புதுச்சேரியில் விற்கப்படும் மதுபானங்கள் 25% கரோனா வரி விதிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் மதுப்பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களைத் தமிழ்நாட்டிற்கு எடுத்து வராத வகையில், கடலூர் - புதுச்சேரி எல்லைப் பகுதிகளான முள்ளோடை, சோரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் விற்கப்படும் மதுவிற்கு 25 விழுக்காடு வரி உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details