கரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மேலும் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரியில் 62 நாட்களுக்குப் பிறகு மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், புதுச்சேரி - தமிழ்நாடு எல்லையில் உள்ள கடலூர் மாவட்ட மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், புதுச்சேரியில் விற்கப்படும் மதுபானங்கள் 25% கரோனா வரி விதிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் மதுப்பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.