தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்குவங்கத்தில் வெங்காயம் திருட்டு.! கொள்ளையர்களுக்கு வலைவீச்சு.! - வெங்காயம் திருட்டு

கொல்கத்தா: வெங்காயத்தின் விலையேற்றம் காரணமாக அது இன்னொரு தங்கமாக மாறி வருகிறது. இதன் நீட்சியாக மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கடையில் திருடர்கள் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை திருடி சென்று விட்டனர்.

Onion of rupees 50 thousand had been stolen from a shop at Haldia, East Midnapur
Onion of rupees 50 thousand had been stolen from a shop at Haldia, East Midnapur

By

Published : Nov 29, 2019, 7:24 AM IST

தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோக நகை வியாபாரிகள் தங்கள் கடைகளின் பாதுகாப்பு கருதி எப்போதும் பாதுகாப்புக்கு ஆள் வைத்திருப்பார்கள். அந்த நிலை தற்போது வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துவருகிறது. இந்த நேரத்தில் மேற்கு வங்க மாநிலம் ஹாடில்யா பகுதியிலுள்ள ஒரு கடையில் வெங்காயம் திருடப்பட்டது. இரவு நேரத்தில் கடைக்குள் புகுந்த திருடர்கள் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வெங்காயத்தை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சுதாஹட்டா காவல் நிலையத்தில் காய்கறி வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மற்றொரு கடையில் மூன்று சாக்குகளில் வெங்காயம் திருடப்பட்டது. வெங்காயம் மட்டுமின்றி ஒரு குவிண்டால் இஞ்சியையும் அவர்கள் திருடியுள்ளனர். இதன் சந்தை விலை ரூ.3ஆயிரம்.

வெங்காயத்தை திருடு கொடுத்த கடைக்காரர்
வெங்காய திருட்டு கடைக்காரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அப்பகுதி கடைக்காரர்கள் கூறும்போது, “ வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. வெங்காய விலையை அரசாங்கம் விரைவில் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால், வெங்காயத்தை வீட்டில் வைத்திருப்பது கடினம்” என்றனர்.

இதையும் படிங்க: வெங்காய விலையைக் கட்டுப்படுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details