மத்தியப் பிரதேச மாநிலம் ரைசன் மாவட்டத்திலுள்ள அல்கன்ஜ் கிராமத்தில் நர்மதை ஆற்றுப்படுகையில் சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளிவந்தனர். இந்நிலையில், அக்கிராம மக்கள் ஆற்றின் ஆழம் தொடர்ந்து குறைந்துவருவதாகக் கூறி, மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அப்பகுதி மக்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ரைசன் மாவட்டக் காவல் துறையினருக்கு இச்சம்பவம் குறித்து புகாரளித்தனர்.