தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 24, 2020, 11:28 AM IST

Updated : Mar 24, 2020, 12:18 PM IST

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா விடுவிப்பு

ஸ்ரீநகர்: கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

Omar abdullah
Omar abdullah

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதி கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இவர்களின் கைது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டன. இதையடுத்து கடந்த மார்ச் 13ஆம் தேதி பரூக் அப்துல்லா வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து மற்ற தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை பரூக் அப்துல்லாவின் மகனும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக லாக் டவுன் எனப்படும் ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது உமர் அப்துல்லா விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மக்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் - மம்தா

Last Updated : Mar 24, 2020, 12:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details