மகாராஷ்டிரா, ஹரியானாவில் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும், இன்றைய தலைமுறைத் தொண்டர்களுக்குக்குமிடையே நடைபெற்றுவரும் உட்கட்சிப்பூசல், தேர்தல் முடிவுகளை பாதிக்குமோ எனக் கட்சித் தொண்டர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை ஈடுகட்டும் விதத்தில் ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல் களங்கள் சரியாகக் கையாளப்படவேண்டுமெனவும், காங்கிரஸ் மாநிலக் கட்சிகள் கோஷ்டிப்பூசல்களாலும், மூத்த, இளைய நிர்வாகிகள் இடையேயான சண்டைகளுடனும் இவ்வாறு இயங்கி வருவது, பாஜக வாக்கு சதவிகிதத்தில் மீண்டும் முன்னிலை வகிக்கப்போவதைத் தடுக்க எவ்விதத்திலும் உதவாது எனவும் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
பட்டியலினத்தைச் சேர்ந்த, ஹரியானா முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அஷோக் தன்வர், முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடாவால் ஆகியோர் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு, தொடர்ந்து விரக்தியில் ராஜினாமா செய்தது, காங்கிரஸ் வாக்கு வங்கியைப் பொறுத்தவரை தற்சமயம் முதலமைச்சர் மனோகர் லால் பாரிக்கருக்கு எதிராக திரும்பியுள்ளது என்றும் கட்சித் தலைவர்கள் சிலர் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதும் ஹூடா, மாநிலத்தின் 25 சதவிகித வாக்குவங்கியையும், பெரும்பான்மை ஜாட் இனமக்களின் வாக்குகளையும் ஈர்க்க வல்லவர் என்றும், ஹரியானா வாக்கு வங்கியைக் கூர்ந்து கவனித்துவரும் காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.