ஒடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள ஜல்பாலி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அப்பள்ளியில் ஆசிரியராக லக்ஷ்மி மெஹர் பணியாற்றிவருகிறார். நேற்று பள்ளியின் முதல்வர் பணிக்கு வராததால், ஆசிரியை ஒரே நேரத்தில் இரு வகுப்புகளை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் அந்த ஆசிரியை, அவரது கணவரை உதவிக்கு அழைத்துள்ளார்.
இதனிடையே ஒரு வகுப்பிலிருந்த மாணவர்களை ஓவியம் வரையும்படி ஆசிரியைக் கூறியுள்ளார். அதையடுத்து உதவிக்கு வந்த அந்த ஆசிரியையின் கணவர், வகுப்பறையினுள் இருந்த மாணவர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டுள்ளார்.