2020ஆம் ஆண்டை செவிலியரின் ஆண்டாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து செவிலியரின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் புதுச்சேரியில் நடைபெற்ற செவிலியர் பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இன்றைய காலகட்டத்தில் செவிலியர்களின் பங்கு அத்தியாவசியமான ஒன்றாகவுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் நவீன நர்சிங் முறையை உருவாக்கித் தந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் நூறாவது பிறந்த நாளில், "2020ஆம் ஆண்டை செவிலியர் ஆண்டாக" கொண்டாட வேண்டுமென அறிவித்துள்ளது. இதைக் கடைப்பிடிக்கும் வகையில் புதுச்சேரியிலுள்ள அனைத்து செவிலியர் கல்லூரிகள், தமிழ்நாடு செவிலியர் - தாதியர் குழுமமும் இணைந்து மாபெரும் பேரணியை நடத்தியது.