டெல்லி: டெல்லி இந்திய தூதரகத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில், இது பயங்கரவாத சம்பவம் என்று நம்புவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மல்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “2012ஆம் ஆண்டு தாக்குதல்களுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா? என ஆராய்ந்துவருகிறோம்.
ஆசிய (மேற்கு) பிராந்தியத்தில் எங்களின் ஸ்திரத்தன்மையை இந்தத் தாக்குதல், தாக்குதல் முயற்சிகள் மூலம் தடுக்கவோ, பயமுறுத்தவோ முடியாது. எங்கள் அமைதி முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும். மேலும், அரபு நாடுகளுடனான இஸ்ரேலின் சமாதான முயற்சிகளையும் தகர்க்க முடியாது. அதுவும் தங்கு தடையின்றி நடைபெறும்” என்றார்.