சமீப காலங்களாக, வனவிலங்கு கடத்தல் முக்கிய தொழிலாக பார்க்கப்படுகிறது. பல நாடுகளிலிருந்து விலங்குகள் கைமாற்றப்படுகின்றன. குறிப்பாக, வட வங்காளத்தின் காடுகளில் வனவிலங்கு கடத்தல் அதிகளவில் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. ஜல்தபாரா, கோருமாரா தேசிய பூங்காக்களில் காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டு அவற்றின் கொம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, சிறுத்தையின் தோல், தந்தம், மரச்செக்குகள் ஆகியவை பல நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.
அஸ்ஸாம், பூட்டானில் இருந்து கடத்தல்காரர்கள் பானிகங்கி, சிலிகுரி வழியாக நேபாளத்திற்குள் நுழைகிறார்கள். நேபாளத்திலிருந்து சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு விலங்குகள் கடத்தப்படுகின்றன எனக் கூறப்படுகிறது. அதே சமயம், கடத்தல்காரர்கள் பூட்டானில் இருந்து ஃபூன்ட்ஷோலிங் மற்றும் ஜெய்கான் வழியாக இந்தியாவுக்குள் நுழைவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.