தமிழ்நாடு

tamil nadu

'சிக்கித் தவிக்கும் மக்களுக்கு சிறப்பு ரயில் இயக்கும் திட்டம் இல்லை'

By

Published : May 1, 2020, 9:27 AM IST

டெல்லி: ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இயக்கத்திற்காக தினந்தோறும் 400 சிறப்பு ரயில்களை இயக்கும் திட்டத்தை இந்திய ரயில்வே தயார் செய்த வருவதாக வெளியான செய்திகளை இந்திய ரயில்வே வியாழக்கிழமை (ஏப்30) மறுத்தது.

Indian Railways  migrant workers  Special trains  Lockdown  சிறப்பு ரயில் இயக்கும் திட்டம் இல்லை  இந்திய ரயில்வே அறிக்கை  கரோனா பாதிப்பு, கோவிட்-19 பெருந்தொற்று, லாக்டவுன்
Indian Railways migrant workers Special trains Lockdown சிறப்பு ரயில் இயக்கும் திட்டம் இல்லை இந்திய ரயில்வே அறிக்கை கரோனா பாதிப்பு, கோவிட்-19 பெருந்தொற்று, லாக்டவுன்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்ப உள் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

உள் துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, சில ஊடக அறிக்கைகள், ரயில்வே துறை சார்பில் நாள் ஒன்றுக்கு 400 சிறப்பு ரயில்களை இயக்கும் திட்டம் உள்ளதாகச் செய்திகள் வெளியிட்டன.

அந்தச் செய்திகளில் இது தொடர்பாக முன்னோட்டங்கள் நடந்ததாகவும், திட்டம் தற்போது தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக இந்திய ரயில்வே உடனடியாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “கரோனா பெருந்தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்திய ரயில்வேயின் அனைத்துப் பயணிகள் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன.

இது மற்ற சாதாரண நேரங்களைப் போலல்லாமல், நாட்டிற்கு ஒரு அசாதாரண சூழ்நிலை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆகவே இது போன்ற வதந்திகளிடம் கவனமாக இருங்கள்.

பயணிகள் ரயில்வே இயக்கத்தை முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவிப்போம். இது தொடர்பாகத் தெளிவாக அறிக்கைகள், உத்தரவு வெளியாகும்” எனக் கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பாளர்கள் அல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றன.

இதற்கிடையில் பயணிகள் ரயில் சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மாநில முதலமைச்சர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நாட்டில் ஆங்காங்கே சிக்கித் தவிப்பவர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுப்பும் முதலமைச்சர்களின் முடிவை அரசியல் தலைவர்கள், பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் 35 ஆயிரத்து 43 பேர் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 1,147 ஆக உள்ளது. சிகிச்சைக்குப் பின்னர் எட்டாயிரத்து 889 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க: 1984 சீக்கிய கலவரம்: ஆயுள் தண்டனை கைதிக்கு பிணை மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details