தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா தொற்று எவருக்கும் இல்லை - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு - quarantine

டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள எவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என குடியரசுத் தலைவர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Rashtrapati Bhawan
Rashtrapati Bhawan

By

Published : Apr 21, 2020, 11:07 PM IST

குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரின் குடும்ப உறுப்பினர் கரோனா தொற்றால் இறந்தவருடன் தொடர்பில் இருந்தது, முன்னதாக கான்டேக்ட் ட்ரேசிங் மூலம் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்திலிருந்த அந்த நபரின் குடும்பம், அவர்களுடன் தொடர்பிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் இருந்த பலரும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு உள்ள எவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என குடியரசுத் தலைவர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பிற்காக சந்தேகிக்கப்பட்ட நபரை குடும்பத்தினருடன் வீட்டில் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கும்படி சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கண்டறிந்து, அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:தனிமைப்படுத்தப்பட்ட கணவர், குழந்தையை வீட்டில் பூட்டிச்சென்று மருத்துவப் பணியாற்றும் தாய்

ABOUT THE AUTHOR

...view details