தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 5, 2020, 12:44 PM IST

ETV Bharat / bharat

கோவாவில் கரோனா வைரஸ் சமூகப் பரவல் இல்லை!

பனாஜி: கோவாவில் கரோனா (கோவிட்19) பெருந்தொற்று சமூகப் பரவல் இல்லையென்று அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறினார்.

Pramod Sawant  Goa CM  transmission of COVID-19  COronavirus  கோவாவில் கரோனா வைரஸ் சமூக பரவல் இல்லை!  கரோனா வைரஸ் சமூக பரவல்  கோவாவில் கரோனா பாதிப்பு
Pramod Sawant Goa CM transmission of COVID-19 COronavirus கோவாவில் கரோனா வைரஸ் சமூக பரவல் இல்லை! கரோனா வைரஸ் சமூக பரவல் கோவாவில் கரோனா பாதிப்பு

கடற்கரை நகரமான கோவாவில் ஏழு பேருக்கு கரோனா (கோவிட்19) பெருந்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறுகையில், “கோவாவில் கோவிட்-19 பெருந்தொற்று சமூகப் பரிமாற்றம் இல்லை.

இது 21 நாட்கள் பூட்டுதல் மற்றும் நாம் கடைப்பிடிக்கும் சமூக இடைவெளியால் சாத்தியமானது. இந்தக் கடுமையான பூட்டுதலை தொடர வேண்டும். மேலும் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழு பேரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். ஏழு பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டவரின் சகோதரர்” என்றார்.

நாடு முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்து 72 ஆக உயர்ந்துள்ளது. இதில் இரண்டாயிரத்து 784 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 213 பேர் குணமடைந்துள்ளனர். கோவிட்19 தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'இது போதாது, கரோனா பரிசோதனையைத் துரிதப்படுத்துங்கள்'- பிரியங்கா காந்தி

ABOUT THE AUTHOR

...view details