தமிழ்நாடு

tamil nadu

'காங்கிரசில் இணையவில்லை!' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்பயா தாயார்

By

Published : Jan 17, 2020, 4:58 PM IST

டெல்லி: நிர்பயாவின் தாயார் காங்கிரசில் இணைகிறார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் பிரமுகருமான கீர்த்தி ஆசாத் கருத்து பதிவிட்டிருந்தார். இதனை நிர்பயாவின் தாயார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Nirbhaya'a mother likely to join Congress
Nirbhaya'a mother likely to join Congress

டெல்லியில் 2012ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி. தனது மகளுக்கு நடந்த அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்திவருகிறார்.

இந்நிலையில், ஆஷா தேவி காங்கிரஸ் கட்சியில் இணையப்போகிறார் என்றும் காங்கிரஸ் சார்பாக போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் பிரமுகருமான கீர்த்தி ஆசாத், ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.

டெல்லியில் அடுத்த மாதம் 8ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் கீர்த்தி ஆசாத்தின் இந்தக் கருத்து காட்டுத் தீப்போன்று பரவத் தொடங்கியது. இதனை நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நிர்பயா தாயார் காங்கிரசில் இணைகிறார்?

இது குறித்து அவர் இன்று கூறும்போது, “எனக்கு எவ்விதமான அரசியல் ஆசையும் இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எவரும் என்னிடம் பேசவில்லை. எனது மகளின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும்” என்றார்.

மேலும் தனது மகளுக்கு நீதி கிடைக்க அன்று போராடியவர்கள் இன்று அவளின் சாவை வைத்து அரசியல் செய்வதாக வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க: நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை தாமதம்: ஆம் ஆத்மி மீது பாஜக குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details