தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு: வழக்கறிஞரை நிராகரித்த குற்றவாளி! - வழக்கறிஞரை நிராகரித்த குற்றவாளி

டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், வழக்கறிஞர் விரிந்தா குரோவர் தன் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Nirbhaya
Nirbhaya

By

Published : Feb 17, 2020, 4:58 PM IST

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால், குற்றவாளி முகேஷின் கருணை மனு நிலுவையிலிருந்த காரணத்தால் தூக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 1ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

மற்றொரு குற்றவாளியின் மனு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காரணத்தால், மீண்டும் தூக்கு தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளி முகேஷ் குமார் சிங் சார்பாக ஆஜராக வழக்கறிஞர் விரிந்தா குரோவர் என்பவரை நீதிமன்றம் நியமித்திருந்தது. ஆனால், அதற்கு முகேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றொரு குற்றவாளியான வினய் சர்மா, திகார் சிறையில் காலவரையற்ற பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக, குற்றவாளிகளுக்கான தூக்கு தேதியை அறிவிக்கக் கோரி நிர்பயாவின் பெற்றோரும், டெல்லி அரசும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நிர்பயா குற்றவாளிகளுக்கு வருகிற 3ஆம் தேதி தூக்கு

ABOUT THE AUTHOR

...view details