தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேவேந்திர சிங் வழக்கு - காஷ்மீர் செல்லும் தேசிய புலனாய்வு முகமை! - தேவேந்திர சிங் வழக்கு

ஸ்ரீநகர்: பயங்கரவாதியுடன் கைதான தேவேந்திர சிங்கை விசாரிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட தேசியப் புலனாய்வு முகமை காஷ்மீருக்கு செல்லவுள்ளது.

Singh
Singh

By

Published : Jan 19, 2020, 3:32 PM IST

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள், காஷ்மீர் மாநிலத்தின் காவல் துணைக் கண்காணிப்பாளர் தேவேந்திர சிங்குடன் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர ஆயுதங்களுடன் பயணம் செய்த போது காவல் துறையினர் கைது செய்தனர்.

காஷ்மீர் மாநிலத்தின் மூத்த காவல்துறை அதிகாரி பயங்கரவாதிகளுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தேசிய புலனாய்வு முகமை இவ்வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், ஐந்து பேர் கொண்ட தேசிய புலனாய்வு முகமை காஷ்மீருக்குச் செல்லவுள்ளது.

குல்கம், குவாசிகுந்த், ஸ்ரீநகர் விமான நிலையம், தேவேந்திர சிங்கின் வீடு உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொள்ளவுள்ளது. விசாரணை முடிந்த பிறகு தேவேந்திர சிங்கை இக்குழு டெல்லிக்கு அழைத்துச் செல்லவுள்ளது. ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவில் தேவேந்திர சிங் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு சம்மன்

ABOUT THE AUTHOR

...view details