தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் மனித உரிமை ஆணையத்தின் முழுமையான சட்டப்பூர்வ கூட்டம் - தேசிய மனித உரிமை ஆணையத்தின் கூட்டம்

டெல்லி: தேசிய மனித உரிமை ஆணையத்தின் முழுமையான சட்டப்பூர்வ கூட்டம் இன்று நடைபெறுகிறது.

NHRC
NHRC

By

Published : Jan 30, 2020, 12:35 PM IST

தேசிய மனித உரிமை ஆணையத்தின் (என்.ஹெச்.ஆர்.சி.) தலைவரும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுமான ஹெச்.எல். தத்து தலைமையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முழுமையான சட்டப்பூர்வ கூட்டம் டெல்லியல் இன்று நடைபெறுகிறது.

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவு திருத்தப்பட்டதற்குப் பின் முதல் முறையாக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் ஆகியவற்றின் தலைவர்கள் புதிய திருத்தத்தின் அடிப்படையில் தேதிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினர், பெண்கள் ஆகியோருக்கான தேசிய ஆணையங்களின் தலைவர்கள் ஏற்கனவே மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இக்கூட்டத்தில் ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களும் உயர் அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.

இதையும் படிங்க : தேசதுரோக வழக்கு: ஜேஎன்யூ மாணவர் ஷர்ஜூல் இம்ரானிடம் ஐந்து நாள்கள் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details