தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட் 19 மருத்துவக் கழிவுகளால் அபாயம் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் - மருத்துவ கழிவுகள் கரோனா பாதிப்பு

டெல்லி: கரோனா பாதிப்பு காலத்தில் ஏற்படும் மருத்துவக் கழிவுகளால் சுற்றுச்சுழல், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.

ngt-raises-concern-over-covid-19-bio-medical-waste-disposal
ngt-raises-concern-over-covid-19-bio-medical-waste-disposal

By

Published : Apr 22, 2020, 9:00 PM IST

நாடு முழுவதும் கரோனா பாதிப்பை போர்க் கால அடிப்படையில், மருத்துவர்கள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில் கரோனாவால் மருத்துவக் கழிவுகள் வழக்கத்தை விடவும் பன்மடங்கு பெருகும் அபாயம் எழுந்துள்ளது.

இதன் தாக்கம் சுற்றுச்சூழல் மற்றும் பொதுச்சுகாதாரத்தை நேரடியாக பாதிக்கும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், இந்த விவகாரம் குறித்து மாநில அரசுகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் அரசுகள் அந்தந்த மாநில அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை முறையாகக் கண்காணிக்கவும், மருத்துவமனைகள் கழிவு மேலாண்மை குறித்த வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுகின்றதா எனவும் உறுதிபடுத்த வேண்டும்.

மேலும், மருத்துவக் கழிவுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளின்படி உரிய முறையில் அப்புறப்படுத்துவதை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி, முறையாக ஆவணப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவக் காப்பீடு ப்ரீமியம் தொகையை தவணைகளில் பெற அனுமதி

ABOUT THE AUTHOR

...view details