தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாயால் களிமண்ணில் புதைக்கப்பட்ட பிறந்த குழந்தை! - New born baby covered in clay

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்த குழந்தை தாயால் களிமண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

new-born-baby-covered-in-clay-by-his-mother
new-born-baby-covered-in-clay-by-his-mother

By

Published : Sep 6, 2020, 6:35 PM IST

ஆந்திரப் பிரதேச மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எடாபகா மண்டல் பகுதியில் பிறந்த குழந்தையை, பெற்றத் தாயே களிமண்ணில் புதைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். சில மணி நேரங்களில் குழந்தை கண் விழித்து அழுதுள்ளது. அந்த அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தையைத் தேடியுள்ளனர்.

பின்னர் களிமண்ணில் புதைத்திருந்த குழந்தையை மீட்டவர்கள், உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட பின், அந்தக் குழந்தை பத்ராச்சலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தாயால் களிமண்ணில் புதைக்கப்பட்ட பிறந்த குழந்தை

சிகிச்சைக்குப் பின்னர் தற்போது குழந்தை நலமுடன் உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தையை மண்ணில் புதைத்துவிட்டு தாயே, தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பிகாரில் கட்டடம் இடிந்து விபத்து - இடிபாடுகளுக்குள் 5 குழந்தைகள்!

ABOUT THE AUTHOR

...view details