இது குறித்து அவர் வாட்ஸ்அப் பதிவில், "புதுச்சேரி ஆளுநர் மாளிகையானது அரசிற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக மதுக்கடைகள் உரிமைகளை ஏலம் எடுக்க ஒரு பொதுவான கொள்கையை உருவாக்க வலியுறுத்தி வருகிறது. அதன் மூலம் மாநில வருவாயை கணிசமாக உயர்த்த கலால்துறையில் வெளிப்படையான மேலாண்மை உருவாகும்.
அதனால் தனியார் கல்வி நிறுவனங்களில் சொத்துகளுக்கு வரிவிதிப்பு, கேளிக்கை வரி மீட்டெடுப்பு, நகராட்சி சேவைகளுக்கு பயனாளிகள் கட்டணம் வசூலிப்பை முறைபடுத்துதல், மின்சாரம், வணிக வரி, சொத்து வரி உள்பட பல நிலுவைத் தொகைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.