இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. இந்நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜூலை 1ஆம் தேதிமுதல் முதல்கட்டமாக 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்தது.
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு இணையதளம் வழியே தொடங்கியது. முன்பதிவு தொடங்கப்பட்ட முக்கிய ரயில்களில் டுரோன்டோ ரயில்கள், ஜான் சதாப்தி ரயில்கள், பூர்வா விரைவு ரயில்கள் ஆகியவையும் அடங்கும்.
இது குறித்து ரயில்வே துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "இன்று 73 ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணி வரை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 25 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றார்.