தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லேண்டர் குறித்து ஆய்வு செய்துவருகிறது தேசிய குழு - இஸ்ரோ சிவன் - sivan on chandrayan 2 lander

சந்திரயான் 2வின் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுவதாகவும் லேண்டர் குறித்து ஆய்வு செய்ய தேசிய அளவில் குழு அமைக்கப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

sivan

By

Published : Sep 26, 2019, 2:44 PM IST

Latest National News நிலவை ஆராய அதன் தென் துருவத்தில் தரையிறங்கும் வகையில் சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் விண்ணில் செலுத்தியது. நிலவில் தரையிறங்க சிறிது நேரமே இருந்த நிலையில், இஸ்ரோ லேண்டருடான தொடர்பை இழந்தது. நிலவின் மேற்பகுதியில் லேண்டர் இருப்பது தெரியவந்தாலும், அதைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், "சந்திரயான் 2இன் ஆர்பிட்டர் என்ற சுற்றுகலன் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறது. லேண்டரை எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் சுற்றுகலன் செயல்பாடு சிறப்பாகவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "லேண்டரில் ஏற்பட்ட தவறு குறித்து ஆய்வு செய்யத் தொடங்கப்பட்ட குழு அதன் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. அதன் முடிவுகளை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: 'முதலீடு செய்யவேண்டும் என்றால், இந்தியாவுக்கு வாருங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி!

ABOUT THE AUTHOR

...view details