தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய டெங்கு தினம் - விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர் - Puducherry Dengue Day Awareness

புதுச்சேரி: தேசிய டெங்கு தினத்தையொட்டி பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் அருண் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தேசிய டெங்கு தினம்
தேசிய டெங்கு தினம்

By

Published : May 17, 2020, 11:36 PM IST

புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை சார்பில், தேசிய டெங்கு தினம் கடைபிடிக்கப்பட்டது.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி அங்காடியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் கலந்து கொண்டு, டெங்கு விழிப்புணர்வு எதிர்ப்பு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க: கரோனா வைரஸ்: புதுமையான முறையில் விழிப்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details