தமிழ்நாடு

tamil nadu

கணவருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் மனைவி கொடுக்க வேண்டும் - உ.பி, நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Oct 26, 2020, 12:49 PM IST

லக்னோ: உ.பி.,யில் கணவரின் பராமரிப்பு செலவுக்காக ரூபாய் 2 ஆயிரம் மனைவி வழங்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

tea
ea

உத்தரப் பிரதேசம் மாநில குடும்ப நல நீதிமன்றத்தில் பெண்ணின் கணவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், அவரும் அவர் மனைவியும் பல ஆண்டுகளாகப் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். மனைவி அரசாங்க ஊழியர் என்பதால் அவருக்கு ஓய்வூதியம் வருகிறது.

எனவே மனைவியிடமிருந்து மாதம் பராமரிப்பு செலவுக்காகப் பணம் பெற்றுத் தருமாறு, இந்து திருமணச் சட்டம் 1955ன் கீழ் குடும்ப நல நீதிமன்றத்தில் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று(அக்-25) நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, ஓய்வுபெற்ற அரசு ஊழியராக இருந்ததாலும், மாதத்திற்கு ரூ 12,000 ஓய்வூதியம் பெறுவதாலும் அந்த பெண் தனது கணவருக்கு மாதம் ரூ 2000 பராமரிப்பு செலவுக்காக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் வழக்கில், வெறும் 2000 ரூபாய் மட்டுமே மனைவி தர வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது என கணவர் கருத்து தெரிவித்துள்ளார்..

ABOUT THE AUTHOR

...view details