ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான துணைநிலை ஆளுநர்கள் பதவியேற்பு! - துணைநிலை ஆளுநர்கள் பதவியேற்பு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் முதல் துணைநிலை ஆளுநர்களாக கிரிஷ் சந்திர மர்மூ, ஆர்.கே மாத்தூர் இருவரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

murmu, mathur-sworn-in-as-lt-governor-of-jammu-and-kashmir, Ladakh
author img

By

Published : Oct 31, 2019, 9:48 PM IST

இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு சட்டம் 370-ஐ நீக்கி, ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகியவற்றை இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.

in article image
ஆர்.கே மாத்தூர்

இதையடுத்து இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் துணைநிலை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீருக்கு கிரிஷ் சந்திரா மர்மு, லடாக்கிற்கு ஆர்.கே மாத்தூர் இருவரும் துணைநிலை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து இன்றிலிருந்து ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டும் அதிகாரப்பூர்வமாக யூனியன் பிரதேசங்களாகப் பிரிந்துள்ளன.

ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் கிரிஷ் சந்திர மர்மூ பதவியேற்பு

இந்த பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர் கிஷோர் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: விமானத்தில் அநாகரிகமான செயல்: பைலட், பணிப்பெண் பணிநீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details