தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டையே உலுக்கிய மும்பை தாக்குதலின் 12ஆவது நினைவு தினம் இன்று! - லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர்

மும்பை: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர் மும்பையில் நிகழ்த்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 12ஆவது நினைவு தினம் இன்று (நவ.26) அனுசரிக்கப்படுகிறது.

26/11 Attacks
26/11 Attacks

By

Published : Nov 26, 2020, 8:32 AM IST

மும்பையின் வரலாற்றில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி என்பது மீளமுடியாத துயரை ஏற்படுத்திய தினம். அன்றுதான் கடல் மார்க்கமாக ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர், மும்பை சிஎஸ்டி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல், காமா மருத்துவமனை, நாரிமன் ஹவுஸ் வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வெடிக்க செய்தும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

பயங்கரவாதிகள் மும்பை சிஎஸ்எம்டி ரயில் நிலையத்தில் நடத்திய தாக்குதல் மிகவும் மோசமானது. நாட்டையே உலுக்கிய இந்தக் கொடூரத் தாக்குதலில் பொதுமக்கள், வெளிநாட்டினர், காவல் துறையினர் உள்ளிட்ட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, அதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, உயிரிழந்த காவல் துறையினரின் நினைவிடத்தில், இத்தாக்குதலில் உயிர் நீத்த பாதுகாப்புப் படையினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு ஒன்றினை மும்பை காவல் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். கரோனா பரவலை கருத்தில் கொண்டு எளிமையான முறையில், குறைந்தளவிலான நபர்களுடன் இந்நிகழ்வு நடைபெறும். அந்தத் தாக்குதலில் உயிர் நீத்த காவல் துறையினர், பாதுகாப்புப்படையினரின் குடும்ப உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், டிஜிபி சுபோத் குமார் ஜெய்ஸ்வால், மும்பை காவல் ஆணையர் பரம் பிர் சிங் உள்ளிடோர் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தவுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details