தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இறந்த பிச்சைக்காரரின் குடிசையில் பக்கெட் பக்கெட்டாக காசுகள்... வங்கிக் கணக்கில் ரூ. 8 லட்சம்! - mumbai beggar died

மும்பை: உயிரிழந்த பிச்சைக்காரரின் குடிசையில் ரூ. 1.75 லட்சத்திற்கு சில்லரை காசுகளும் வங்கிக் கணக்கில் ரூ. 8 லட்சம் ரொக்கமும் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

mumbai beggar

By

Published : Oct 7, 2019, 2:21 PM IST

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மன்கர்ட் - கோவண்டி ரயில் நிலையங்களுக்கிடையில் உள்ள இருப்புப் பாதையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முதியவர் ஒருவர் இறந்துகிடந்தார். ரயில் மோதியதில் உயிரிழந்த அவரின் உடலைக் கைப்பற்றிய ரயில்வே காவல் துறையினர், இறந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவரது பெயர் ஆசாத் என்றும், ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசையில் அவர் வசித்துவருவதாகவும் அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். பின்னர், அவரது குடிசைக்கு காவலர்கள் சென்று பார்த்தபோது, பக்கெட் போன்ற பெரிய டப்பாக்களில் ரூ. 1.75 லட்சத்திற்கு சில்லரை காசுகளாக இருப்பதைக்கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.

சில்லரை காசுகள்

அதற்கெல்லாம் ஒருபடி மேலாக, ரூ. 8.77 லட்சம் பணம் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் வங்கி கணக்கு ஒன்றின் பாஸ்புக்கும், அதில் தனது மகன் சுகதேவ் என்பவரை நாமினியாகவும் குறிப்பிட்டு வைத்துள்ளார் அந்த பிச்சைக்காரர். மேலும், அதற்கான ரசீதுகள், ஆதார், பான்கார்டு போன்றவற்றையும் அவர் தனது பெட்டியில் வைத்துள்ளார்.

இதையெல்லாம் வைத்து அவரது மகனை தொடர்புகொண்ட காவல் துறையினர், ஆசாத்தின் உடலை பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பிச்சைக்காரர் பஷீர் இல்லே; லட்சாதிபதி பஷீர்... ஆந்திராவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

ABOUT THE AUTHOR

...view details