மும்பை:மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் டப்பாவாலாக்கள் பரவலாக காணப்படுகின்றனர். இவர்கள் அலுவலகங்களில் பணிபுரியும் பலருக்கு அவர்களது மதிய உணவினை கொண்டு சேர்க்கும் பணியினை செய்து வருகின்றனர். இவர்களுக்கென பல சங்கங்கள் மும்பையில் இயங்குகின்றன.
இதனைப் பயன்படுத்தி 61 டப்பாவாலா என்ற பெயரில் சுபாஷ் தலேகர் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பல டப்பாவாலாக்களிடம் மோசடி செய்து வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தங்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்குவதாக உறுதியளித்து ஏழு லட்ச ரூபாய்வரை மோசடி செய்ததாக இவர் மீது டப்பாவாலாக்கள் கடந்த 2019ஆம் ஆண்டு மீண்டும் மும்பை காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.