தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் பன்முகத்தன்மை உயரவில்லை'- ஜெய்சங்கர்! - வெளியுறவுத்துறை அமைச்சர்

மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் பன்முகத்தன்மை உயரவில்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

External Affairs Minister  S Jaishankar  ASEAN-India Network  Multilateralism  ஜெய்சங்கர்  வெளியுறவுத்துறை அமைச்சர்  ஆசியான் இந்தியா தொடர்பு
External Affairs Minister S Jaishankar ASEAN-India Network Multilateralism ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆசியான் இந்தியா தொடர்பு

By

Published : Aug 20, 2020, 10:04 PM IST

டெல்லி: “ஆசியான்-இந்தியா நெட்வொர்க் ஆஃப் திங்க் டேங்” மாநாடு வியாழக்கிழமை (ஆக.20) காணொலி வாயிலாக நடந்தது.

அந்த மாநாட்டில் உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உலகளவில் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட முன்னோடியில்லாத சவால்களை பற்றி தெரிவித்தார்.

மேலும் உலகம் மீண்டும் ஒருபோதும் மாறாது என்றும், தொற்றுநோயின் தாக்கம் கூட்டு கற்பனைக்கு அப்பாற்பட்டது என்றும் அவர் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "கரோனா பரவலுக்கு பிந்தைய மதிப்பீடுகளின்படி, ஒட்டுமொத்த இழப்பு 5.8 முதல் 8.8 டிரில்லியன் டாலராக உள்ளது. அதாவது, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 6.5 முதல் 9.7 சதவிகிதம் வரை குறைந்திருக்கின்றன.

அதே நேரத்தில், உயிரிழப்பு மற்றும் வாழ்வாதாரத்தின் அடிப்படையில் தொற்றுநோயின் அழிவின் உண்மையான அளவு தெளிவாக இல்லை. தற்போது, சர்வதேச சமூகம் கூட்டுத் தீர்வுகளைத் தேடுவதில் மிகவும் நேர்மையாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், சர்வதேச சமூகம் கூட்டுத் தீர்வுகளைத் தேடுவதில் மிகவும் நேர்மையாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இது அடிக்கோடிட்டு காட்டுகிறது.

இருப்பினும், முரண்பாடு என்னவென்றால், பன்முகத்தன்மை மிகவும் தேவைப்பட்டபோது, ​​அது சந்தர்ப்பத்திற்கு உயரவில்லை. உலகளவில், கரோனா வைரஸ் 22 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இதுவரை ஏழு லட்சத்து 80 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில், சுமார் 28 லட்சம் கரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதேசமயம் இறந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 800 ஆக உள்ளது. இந்நிலையில், தற்போதைய நிலைமை சர்வதேச அரசியலின் தீவிர போட்டி தன்மையையும் பிரதிபலிக்கிறது.

இச்சூழலில் பொருளாதார பாதுகாப்பை உள்ளடக்குவதற்காக தேசிய பாதுகாப்பு மறுவரையறை செய்யப்படுவதை நாம் ஏற்கனவே பார்த்தோம்.

நாம் ஒருவருக்கொருவர் அருகிலேயே இருப்பதோடு மட்டுமல்லாமல், ஆசியாவையும் உலகத்தையும் வடிவமைக்க உதவுகிறோம். இந்த நேரத்தில், நாம் தலைமையை ஒன்றிணைப்பது முக்கியம்.

ஆசியான் பிராந்தியமும் இந்தியாவும் சேர்ந்து 1.85 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளது, இது உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்காகும், அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோ-பசிபிக் உள்ளிட்ட விவாதங்களுக்கு கருத்தியல் சிக்கல்கள் உள்ளன” என்றனர். இந்த மாநாட்டில், இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 'உலகம் இருமுனை தாக்குதலை எதிர்கொள்கிறது'- ஜெய்சங்கர்

ABOUT THE AUTHOR

...view details