தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

5 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைய காத்திருக்கும் இளைஞர்!

போபால்: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன அனில் சாகேத் என்ற இளைஞன் பாகிஸ்தானிலிருந்து தனது சொந்த ஊர் திரும்புவதால், அவரது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

By

Published : Sep 17, 2020, 1:17 AM IST

ஐந்தாண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைய காத்திருக்கும் இளைஞர்!
ஐந்தாண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைய காத்திருக்கும் இளைஞர்!

மத்திய பிரதேச மாநிலம் ரேவா நகரத்தில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சாகேத் என்பவர் காணாமல் போனார். அவரை தேடிய அவரது குடும்பத்தினர், இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். காலம் செல்ல செல்ல அவர் ஒருபோதும் திரும்பி வரமாட்டார் என்று குடும்பத்தினர் நினைத்தார்கள். கணவர் திரும்பி வரமாட்டார் என நினைத்து சாகேத்தின் மனைவியும் உறவினர்கள் கட்டாயத்தின் பேரில் மறுமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், காணாமல்போன இளைஞன் குறித்து மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை உறுதிபடுத்திக்கொள்ள மேற்கொண்ட விசாரணையில், சாகேத் பாகிஸ்தானில் இருப்பது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.

இப்போது ​​அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று குடும்பத்தினரிடம் அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரர் உள்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாக அவரது வருகைக்காக காத்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details