ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதி ஜாக்கர் மூசா. பொறியியல் பட்டப்படிப்பை பதியில் நிறுத்திவிட்டு பயங்கரவாத அமைப்பான முஜாஹிதீன் அமைப்பில் சேர்ந்து பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த அமைப்பின் தளபதியாகவும் செயல்பட்டுள்ளார்.
பின்னாளில், அந்த அமைப்பைவிட்டு விலகி அல்-குவைதாவின் ஆதரவுடன் அன்சர் காஸ்வாட்- உல்-ஹிந் (Ansar Ghazwat- ul Hind) என்னும் அமைப்பை ஆரம்பித்து, சிரியாவின் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைப் போன்று இந்தியாவிலும் காலிஃபேட் ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு பரப்புரை மேற்கொண்டுவந்துள்ளார்.