கரோனா தீநுண்மி அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. தற்போது ஊரடங்குகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து குறைந்த அளவு பயணிகளைக்கொண்டும், தகுந்த இடைவெளியினைக் கடைப்பிடித்தும் பேருந்துகளை இயக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் எலவென்ஹாவிலிருந்து இயக்கப்பட்ட பேருந்து ஒன்றில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் 70 பயணிகளுடன் பயணித்ததாகப் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.