பிரதமர் நரேந்திர மோடி உத்ரகாண்ட் மாநிலம் கேதார்நாத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். நேற்று அங்குள்ள பிரசித்திப்பெற்ற கேதார்நாத் கோயிலில் பிரார்த்தனை மேற்கொண்ட மோடி, அதைத் தொடர்ந்து அங்குள்ள பனிக்குகையில் இரவு முழுவதும் தியானம் செய்தார்.
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மோடி, 'கேதார்நாத்திற்கும் தனக்கும் உணர்வுப்பூர்வமான உறவு இருந்துவருகிறது. எனவே அங்கு வழிபாடு செய்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை பேரழிவுக்கு பின் கேதார்நாத்தை மீண்டும் மேம்படுத்துவதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.