இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரும், அகில இந்திய விவசாயிகள் பேரவை பொதுச்செயலாளருமான ஹன்னா முல்லா நமது ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "கடந்த ஆறு ஆண்டுகளாக அரசு தேவையில்லாத திட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளை ஏமாற்றிவருகிறது. பிரதான் மந்திரி சாமான் நிதி, பிரதான் மந்திரி ஃபாசால் பீமா யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிக்காமல் தோல்வியடைந்துள்ளன. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பங்கள் இன்றளவும் தொடர்ந்து நடந்துகொண்டுகின்றன.
விளைபொருள்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ட ஆதரவு விலையை உயர்த்த வேண்டும். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அளிக்கப்பட வேண்டும். விவசாயப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.