திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கடலூரில் கட்சி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு புதுச்சேரிக்கு வருகைதந்தார். அப்போது, புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்கள் சிவா எம்எல்ஏ, சிவக்குமார், திமுக எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளிட்ட திமுகவினர் அவரைச் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘வேண்டுமென்றே திட்டமிட்டு, வேறு வழியின்றி ஆளும் அதிமுக அரசும் தேர்தல் ஆணையமும் இந்த உள்ளாட்சி தேர்தலை அறிவித்துள்ளன. இதுவரை மறுவரையறை முழுமைபெறவில்லை. குறிப்பாக, இந்த தேர்தலை நிறுத்த நாங்கள் நீதிமன்றம் செல்லவில்லை.