தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மிசோரத்தில் முதல் சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலை தொடக்கம் - மின்நாற்றல்

மிசோரம் மாநிலத்தின் முதல் சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலையின் செயல்பாட்டை அம்மாநில மின்னாற்றல் துறை அமைச்சர் லால்ஷிர்லியானா இன்று (டிசம்பர் 7) தொடங்கிவைத்தார்.

சூரிய மின்சக்தி ஆலை தொடக்கம்
சூரிய மின்சக்தி ஆலை தொடக்கம்

By

Published : Dec 7, 2020, 7:50 PM IST

அய்சால் (மிசோரம்):மிசோரம் மாநிலத்தின் முதல் சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலை அம்மாநில தலைநகர் அய்சாலில் இருந்து 58 கிலோமீட்டர் தொலைவில் துலுங்கவெல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை 2 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதன் செயல்பாட்டை அம்மாநில மின்னாற்றல் துறை அமைச்சர் லால்ஷிர்லியானா இன்று தொடங்கிவைத்தார்.

அதன் பின் பேசிய அவர், " நாட்டின் சூரிய மின் சக்தி துறையில் மிசோரம் அடியெடுத்து வைத்திருப்பது மாநிலத்தின் பெருமையான தருணம். அதேபோல், நீர் மின் உற்பத்தியிலும் தன்னிறைவு அடைவதற்கு மிசோரம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் மின் உற்பத்தி துறையில் சுயசார்பு பாரதம் என்ற இலக்கை அடைய முடியும்" என்றார்.

மாநில அரசின் ரூ. 1,400 லட்சம் நிதியில், கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த ஆலையின் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலையில், 5,340 சூரிய ஒளி மின் உற்பத்தி தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 30 லட்சம் யூனிட் வரை இங்கு மின் உற்பத்தி செய்யப்படும். அதுமட்டுமல்லாது, தற்போது அம்மாநிலத்தின் வன்கல் எனும் பகுதியில், 20 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:சோலாரில் சொட்டு நீர் பாசனம் - தர்பூசணி சாகுபடியில் அசத்தும் விவசாயி!

ABOUT THE AUTHOR

...view details