போர்க்காலத்தில் சிறப்பான சேவைக்கான யுத் சேவா பதக்கம் பெற்ற ஸ்குவாடன் லீடர் மிண்டி அகர்வால் ஆவர். இவர், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி அன்று நடந்த வான்வழித் தாக்குதலில் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டுத்தள்ளியதை தான் நேரில் பார்த்ததாக பேட்டி அளித்தார்.
பாக்., போர் விமானத்தை சுட்டுத் தள்ளிய அபிநந்தன்! நேரில் பார்த்த மிண்டி அகர்வால்!
டெல்லி: வான்வழித் தாக்குதலின்போது விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டுத்தள்ளியதை தான் நேரில் கண்டதாக யுத் சேவா பதக்கம் பெற்ற ஸ்குவாடன் லீடர் மிண்டி அகர்வால் தெரிவித்துள்ளார்.
Minty Agarwal
பிப்ரவரி 26ஆம் தேதியன்று நடந்த பாலகோட் வான்வழித் தாக்குதலுக்கு அடுத்தநாள் நடைபெற்ற சண்டையில், விங் கமாண்டர் அபிநந்தன் தக்க நேரத்தில் எதிரி விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்ட அவர்,அந்நேரத்தில் தான் அருகிலிருந்து அத்தாக்குதலை நேரில் கண்டதாகவும் பிரமிப்புடன் தெரிவித்தார்.
Last Updated : Aug 18, 2019, 7:20 AM IST