தமிழ்நாடு

tamil nadu

வீட்டு முற்றத்தில் விளையாடிய சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு வலை.!

டெல்லி: வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Dec 1, 2019, 11:15 PM IST

Published : Dec 1, 2019, 11:15 PM IST

Minor girl raped, dumped at an isolated place in Delhi's Narela
Minor girl raped, dumped at an isolated place in Delhi's Narela


டெல்லி நரேலா பகுதியில் கடந்த 26ஆம் தேதி சிறுமி ஒருவர் கடத்தப்பட்டார். இந்த நிலையில் அச்சிறுமி அருகிலிருந்த சாலை ஓரத்தில் உடலில் காயங்களுடன் மறுநாள் மீட்கப்பட்டார். இந்நிலையில் அவரின் உடலில் ரத்தப் போக்கு அதிகரித்ததை தொடர்ந்து சிறுமியை உறவினர்கள் சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர் கூறும்போது, சிறுமி பாலியல் வன்புணர்வு ஆளாகி இருப்பதாக தெரிவித்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ (பாலியல் கொடுமைகளிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாத்தல்) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை வலைவீசி தேடிவருகின்றனர்.

சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்

ABOUT THE AUTHOR

...view details