புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர், அமைச்சர்கள் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்ததால் கடந்த 5ஆம் தேதி முதல் புதுச்சேரி நகரப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை, மணக்குள விநாயகர் கோயில், பாரதி கடற்கரை சாலை, அரவிந்தர் ஆசிரமம், தலைமை செயலகம் ஆகியற்றை சுற்றி மூன்று அடுக்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை எதிரில் அமைந்துள்ள பாரதி பூங்கா தேதி குறிப்பிடாமல் மூடியுள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஜன. 23) நடைபயிற்சி சென்ற சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, மூடிய பாரதி பூங்கா கதவை திறந்து உள்ள சென்று நடை பயிற்சி சென்றார். இத்தகவல் அறிந்து நடைபயிற்சியில் இருந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரத்க்ஷா கொடாரா, காவல் துறையினர் அங்கு வந்தனர். அப்போது காவல் துறையினருக்கும் அமைச்சருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.