தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சொந்த ஹெலிகாப்டரை தாக்கிய ஐ.ஏ.எஃப். - எழுவர் உயிரிழப்புக்கு காரணமானோர் மீது நடவடிக்கை! - ஆயுதப்படை தீர்ப்பாயம் ஒழுங்கு நடவடிக்கை

டெல்லி: கடந்தாண்டு எதிரி விமானம் என நினைத்து சொந்த போர் ஹெலிகாப்டர் மீது ஐ.ஏ.எஃப். நடத்திய தாக்குதலினால் 7 பேரின் உயிரிழந்தனர். இதற்குக் காரணமான இரண்டு அலுவலர்கள் மீது ஆயுதப்படை தீர்ப்பாயம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

heli
eli

By

Published : Sep 15, 2020, 3:26 PM IST

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி, பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த சுமார் 24 விமானங்கள், எல்லையைக் கடந்து இந்திய ராணுவத் தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.

இதை எதிர்கொள்ள 8 இந்திய விமானப் படை விமானங்கள் புறப்பட்டுள்ளன. அப்போதுதான் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருக்கும் விமானப் படை ரேடார், குறைந்த உயரத்தில் பறக்கும் ஒரு விமானத்தை கண்டுபிடித்தது. அது யாருடையது என்று அறிய முடியாத வகையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஹெலிகாப்டர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இறுதியில்தான் அது சொந்த நாட்டுப் போர் ஹெலிகாப்டரான எம்.ஐ.எஃப். 17 என்பது தெரியவந்தது. இதில் 6 விமானப் படை வீரர்கள், ஒரு நபர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அச்சமயத்தில் பொறுப்பில் இருந்த விமானப்படை தளபதி ராகேஷ் குமார், இது மிகப்பெரிய தவறு என ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இந்த மனித தவறுக்கு பொறுப்பான குழு கேப்டன் எஸ்.ஆர். சவுத்ரி, விங் கமாண்டர் ஷியாம் நைதானி ஆகிய இருவர் மீதும் ஆயுதப்படை தீர்ப்பாயம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இத்தனை நாள்களாக ஏன் இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி ஏழுப்பிய தீர்ப்பாயம், அடுத்தக்கட்ட வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ஆம்‌ தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த விபத்திற்கு காரணம் - ஹெலிகாப்டரிலிருந்த ஐ.எஃப்.எஃப். அணைக்கப்பட்டிருந்ததாகவும், தரை ஊழியர்கள், இடைநிலை ஊழியர்களிடையே தொடர்பு-ஒருங்கிணைப்பில் இடைவெளிகள் இருந்ததுதான் என விசாரணையில் கண்டறியப்பட்டது.

ஒரு விமானம் அல்லது ஹெலிகாப்டர் நண்பனா அல்லது எதிரியா என்பதை அடையாளம் காண விமான பாதுகாப்பு ரேடார்களுக்கு ஐ.எஃப்.எஃப். உதவுகின்றது.

ABOUT THE AUTHOR

...view details