தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 30, 2020, 12:42 PM IST

ETV Bharat / bharat

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

Militant killed in Lawaypora encounter, operation on
Militant killed in Lawaypora encounter, operation on

ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள லாவோய்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நேற்று(டிச.29) நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

மேலும் இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்புப் படையினர், நிகழாண்டில் லாவோய்போரா பகுதியில் இரண்டு முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஸ்ரீநகரில் 10 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றனர்.

ராணுவத்தின் 2ஆவது ராஷ்டிரிய துப்பாக்கிப் படை, ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் நேற்று (டிச.29) மாலையிலிருந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தனர்.

இதையும் படிங்க: தேவை ஏற்பட்டால் இந்தியா எல்லை தாண்டி தாக்குதல் நடத்தும் - ராஜ்நாத் சிங்

ABOUT THE AUTHOR

...view details