தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 6, 2020, 12:39 PM IST

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீர் - என்கவுன்ட்டரில் அயுதம் ஏந்திய பிரிவினைவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர்  பாம்பூரின் லல்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் அயுதம் ஏந்திய பிரிவினைவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Militant killed in encounter
Militant killed in encounter

ஜம்மு-காஷ்மீர் பாம்பூரின் லல்போரா பகுதியில் நேற்று(நவ-5) பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அயுதம் ஏந்திய பிரிவினைவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

அந்த பகுதியில் தொடர்ந்து இரவு முழுவதும் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று(நவ-6) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அயுதம் ஏந்திய பிரிவினைவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் யார் என்பது குறித்துக் கண்டறியப்பட்டு வருகிறது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details