தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 13, 2020, 7:39 PM IST

ETV Bharat / bharat

பாதுகாப்புப் படையினரின் என்கவுன்டரில் ஒருவர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் பாராமுல்லாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையினரால் ஒரு பிரிவினைவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Militant killed in encounter in J-K's Baramulla
Militant killed in encounter in J-K's Baramulla

பாராமுல்லா, ஷாதுல்லோ கிராமப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் காவல் வளையம் அமைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதன் தொடர்ச்சியாக பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இதில் அடையாளம் தெரியாத பிரிவினைவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது அடையாளம் மற்றும் எந்தக் குழுவைச் சார்ந்தவர் என்பதை அறியும் முயற்சி நடைபெற்று வருகிறது என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details