தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்முவில் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை! - பயங்கரவாதிகள் சுட்டிக்கொல்லப்பட்டனர்

ஜம்மு: காஷ்மீர் - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் காவல் துறையினருக்கும் - பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பயங்கரவாதிகள் மூவர் சுட்டிக்கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்
பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்

By

Published : Jan 31, 2020, 12:12 PM IST

ஜம்மு - காஷ்மீரின் நக்ரோடா பகுதியில் உள்ள டோல் பிளாசா அருகே சோதனை செய்வதற்காக ஸ்ரீநகர் செல்லும் லாரி ஒன்றை அதிகாலை 5 மணியளவில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த லாரியில் இருந்த பயங்கரவாதிகள், காவலர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்துள்ளார். பின்னர், காவல் துறையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில், பயங்கரவாதிகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றதாக ஜம்மு - காஷ்மீர் காவல்துறை தலைமை இயக்குனர் தில்பாக் சிங் தெரிவித்தார். இந்நிலையில், தப்பியோடிய பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து, அதில் மூவர் கொல்லப்பட்டதாகவும் மேலும், ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தலைவர் முகேஷ்சிங் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளை தாக்கும் காணொளி காட்சி

இதனிடையே, துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிஆர்பிஎப் வீரர்கள் இடையே மோதல்; 6 குண்டுகளைத் தலையில் வாங்கி வீரர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details