வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப ஏதுவாக ரயில்வே துறை சிறப்பு ரயில்களை இயக்கிவருகிறது. இந்தச் சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்தை மத்திய அரசு 85 விழுக்காடும், மாநில அரசு 15 விழுக்காடும் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்நிலையில், பிரதமரின் அறிவிப்புக்கு மாறாகச் சிறப்பு ரயில்களுக்கான கட்டணங்கள் குடிபெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து வசூலிக்கப்படுவதாக மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் இருக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர், போபாலின் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்திலிருந்து பிகாரிலுள்ள தர்பங்கா ரயில் நிலையத்திற்குச் செல்ல தன்னிடம் இருந்து 575 ரூபாய் பெற்று டோக்கன்களை வழங்கியதாகவும், அதை ரயில் நிலையத்தில் கொடுத்து டிக்கெட்டுகளாக மாற்றிக்கொள்ள அவர்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும் கமல்நாத், "குடிபெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், அதற்காக அவர்களிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்றும், உண்மைக்கு முரணான பல விஷயங்களைக் கூறிவருகின்றன.